சென்னை: மார்கழி மாதம் பவுர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று `திருவாதிரை' திருவிழா `ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரனுடன் கூடிய பவுர்ணமி நாளில் உபவாசம் இருந்து, சிவபெருமானை வழிபடும் நாள். அந்த வகையில் வடபழனி முருகன் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து நடராஜர், பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் நடக்கிறது. பிறகு, காலை 5 மணிக்கு ஊடல் உற்சவம் நடக்கிறது. அதேபோல மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர், பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் உள்ளிட்ட சிவ ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் இன்று நடக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
விளையாட்டு
20 mins ago
தமிழகம்
35 mins ago
ஓடிடி களம்
56 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுலா
23 mins ago
தொழில்நுட்பம்
14 mins ago
தமிழகம்
50 mins ago