சென்னை கோயில்களில் இன்று ஆரூத்ரா தரிசனம்

By செய்திப்பிரிவு

சென்னை: மார்கழி மாதம் பவுர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று `திருவாதிரை' திருவிழா `ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரனுடன் கூடிய பவுர்ணமி நாளில் உபவாசம் இருந்து, சிவபெருமானை வழிபடும் நாள். அந்த வகையில் வடபழனி முருகன் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து நடராஜர், பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் நடக்கிறது. பிறகு, காலை 5 மணிக்கு ஊடல் உற்சவம் நடக்கிறது. அதேபோல மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர், பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் உள்ளிட்ட சிவ ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் இன்று நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

35 mins ago

ஓடிடி களம்

56 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

23 mins ago

தொழில்நுட்பம்

14 mins ago

தமிழகம்

50 mins ago

மேலும்