திருப்பத்தூரில் மதுபானம் விற்றதாக 5 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பத்துார் நகர் பகுதிகளில் அனுமதி யின்றி டாஸ்மாக் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் நகரகாவல் ஆய்வாளர் ஹேமாவதி தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில்ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாலன்(40), கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருப்பதி (45), புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஜான்(34), பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தவமணி(50) மற்றும் திருப்பதி(22) ஆகிய 5 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்