சாலையை சீரமைக்ககோரிசேலத்தில் பொதுமக்கள் மறியல் :

By செய்திப்பிரிவு

சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் திருவாகவுண்டனூர் பை-பாஸ் பகுதியில் உள்ள மேத்தா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் அப்பகுதி சாலை சேதம் அடைந்தது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திருவாகவுண்டனூர் பை-பாஸ் சாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற சூரமங்கலம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

“தொடர்ந்து மழை பெய்து வருவதால் உடனடியாக சாலை அமைக்க இயலாது என்றும் விரைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனிடையில், தகவல் அறிந்து அங்கு சென்ற சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அருள், சேதமடைந்த சாலையை பார்வையிட்டார். பின்னர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்