நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கிராமத்தில் தார்சாலை அமைத்துத் தரக்கோரி உருளு தண்டம் போடும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டதன் எதிரொலியாக சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அருகே செக்காரப்பட்டி கிராம சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையடுத்து மழைநீரை அகற்றக்கோரியும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் கிராம மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் உருளு தண்டம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சித் தலைவர் உறுதியளித்தார். இதன்படி கிராம சாலை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. பணிகள் விரைந்தும், தரமாகவும் முடிக்கப்படும் எனவும் ஊராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago