யானைத் தந்தம் கடத்திய 3 இளைஞர்கள் வனத்துறையால் கைது :

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இருந்து யானை தந்தம் கடத்திய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக யானைத் தந்தம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தருமபுரி வனக் கோட்ட பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தருமபுரி அடுத்த சோகத்தூர் கூட்டு ரோடு அருகே சந்தேகத்துக்கு இடமாக வந்த காரில் ஆய்வு நடத்தினர். அதில், காரில் 2 யானைத் தந்தங்கள் இருப்பது தெரிய வந்தது. எனவே, கார் மற்றும் தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டம் பவளந்தூரைச் சேர்ந்த சின்னசாமி(29), பிலிகுண்டுலு கிராமம் வினோத் (22), நெருப்பூர் கிராமம் கார்த்திக் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள சேட்டு, சக்திவேல் ஆகியோரை தீவிரமாக தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்