கொள்ளிடத்தின் மையப்பகுதி திடலில் சிக்கிய 55 மாடுகள் மீட்பு :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் திடல் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 4 நாட்க ளுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற 55 பசுமாடுகள் கொள்ளி டத்தில் அதிகளவு தண்ணீர் செல்வதால் வெளியில் வரமுடி யாமல் திடலிலேயே தவித்து வந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜெயங் கொண்டம் தீயணைப்புத் துறையினர் மாடுகளை மீட்க முயற்சி செய்தும் பயனளிக்கா ததால், நேற்று காலை படகுகள் மூலம் பொதுமக்கள் சிலருடன் திடல் பகுதிக்கு சென்ற தீய ணைப்புத்துறை வீரர்கள், தண்ணீர் குறைவாக செல்லும் பகுதிகளுக்கு பசுமாடுகளை ஓட்டிச் சென்று, நீந்தச் செய்து கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், அவை சம்மந்தப்பட்ட விவசாயிகள் வசம் ஒப்படைக் கப்பட்டன.

இதற்காக தீயணைப்புத்துறை வீரர்களுக்கு விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

12 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்