ராமேசுவரம் சல்லிமலை பகுதியை சேர்ந்தவர் எஸ்.குமரன் (40). இவர் தனியார் தொலைக்காட்சியின் ராமேசுவரம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
அவரது பகுதியில் சிலர் குடிபோதையில் பிரச்சினை செய்து வருவது தொடர்பாக, ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர் சத்யராஜ், செய்தியாளர் குமரனை ஒருமையில் பேசி மிரட்டியதுடன் தாக்கி உள்ளார். காயமடைந்த குமரன் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக ராமேசுவரம் நகர காவல் நிலையத்தில் குமரன் புகார் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், காவலர் சத்தியராஜை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago