திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திaருச்சி மண்டலத்துக் குட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற் பாடுகள் ஆகியன குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த பேரூராட்சிகள் ஆணையர் இரா.செல்வராஜ் பேசியது: திட்டப் பணிகளைக் குறித்த காலத்தில் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அடிப்படை தேவைகள் உட்பட மக்களுக்குத் தேவையான பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில், பேரூராட்சிகள் இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி, உதவி இயக்கு நர் த.காளியப்பன், செயற்பொறி யாளர் கருப்பையா மற்றும் பேரூ ராட் சிகள் செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago