அரக்கோணம் அருகே மின்சார ரயில் மோதியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது விபத்தா? அல்லது கொலையா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பார்த்தசாரதி(30), இவரது நண்பர் ரங்கன் மகன் சுகுமார்(26). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில்வே மார்க்கத்தில் தக்கோலம் - திருமால்பூர் ரயில் நிலையம் இடையே சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே பார்த்தசாரதியும், சுகுமாரும் சென்னை கடற்கரையில் இருந்து அரக் கோணம் வரை செல்லும் மின்சார ரயிலில் அடிப்பட்டு மயங்கி கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அரக் கோணம் ரயில்வே காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நெமிலி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ரயிலில் அடிப்பட்டு சுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார்.
காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்த்த சாரதியை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் நடைபெற்ற இடம் செங்கல்பட்டு ரயில்வே காவல் துறையினரின் எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால் செங்கல்பட்டு ரயில்வே காவல் துறையினர் 2 பேரின் உடல்களையும் கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ரயில்வே காவல் துறையினர் நடத்திய விசா ரணையில், சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே பார்த்த சாரதி, சுகுமாருடன் சேர்ந்து மேலும் ஒருவர் என 3 பேர் தண்டவாளம் அருகே அமர்ந்து நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்ததாகவும், மின்சார ரயிலில் 2 பேர் மட்டுமே அடிப்பட்டு உயிரிழந்து இருப்பதால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? என ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago