போளூர் அருகே இரு சக்கர வாகனங்களை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் துறையினர், வசூர் கூட்டுச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக சந்தேகிக்கும் வகையில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் இருவரும், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த ராஜா பாளையம் கிராமத்தில் வசிக்கும் கார்த்திக்(19), புலவர் பள்ளி கிராமத்தில் வசிக்கும் பரமேஸ்வரன்(19) ஆகியோர் என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட இரு சக்கர வாகனம் என்பதும், பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 secs ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
3 hours ago