ஓய்வூதியம் வழங்கக்கோரி - கட்டிடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் வி.எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை, சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன் தொடங்கி வைத்துப் பேசினார்.

‘கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் மாத ஓய்வுதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். புதுச்சேரி நலவாரியம்போல தீபாவளி, பொங்கல் பண்டிகை போனஸாக ரூ.5,000 வழங்க வேண்டும். பேருகால நிவாரணமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர் மற்றும் தொழிலாளர் குழந்தைகளின் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

எஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் எஸ்.தமிழ்மணி, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, உதவிச் செயலாளர் சு.சுரேஷ், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு.சிவராஜ், பொருளாளர் கே. கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 secs ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்