தி.மலை பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் எதி ரொலியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு ஒன்றரை ஆண்டுகளை கடந்த பிறகும் தொடர் கிறது. ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள் ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வரும் 19-ம் தேதி (நாளை) இரவு தொடங்கி, 20-ம் தேதி இரவு வரை உள்ள பவுர்ணமி நேரத்தில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள், பொதுமக்கள் யாரும் வருகை தர வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

17 mins ago

கருத்துப் பேழை

14 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

7 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்