கரோனா தொற்று பரவல் எதி ரொலியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு ஒன்றரை ஆண்டுகளை கடந்த பிறகும் தொடர் கிறது. ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள் ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வரும் 19-ம் தேதி (நாளை) இரவு தொடங்கி, 20-ம் தேதி இரவு வரை உள்ள பவுர்ணமி நேரத்தில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள், பொதுமக்கள் யாரும் வருகை தர வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
17 mins ago
கருத்துப் பேழை
14 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
7 mins ago
சினிமா
59 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago