கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்துகொள்ளலாம் என ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சிசார்பில் பல்நோக்கு பணியாளர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 3,261 பணியிடங் களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க வரும் 25-ம் தேதி கடைசி நாளாகும். இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளன. மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இலவச பயிற்சி வகுப்பில் பாடக்குறிப் புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் ஆகியவை இணையதளம் வாயிலாகவே பகிரப்படும்.
மேலும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வில் தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும் செய்யப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் குறித்து அறிய 9499055938 என்ற எண்ணில் வாட்ஸ்அப்-ல் தொடர்புகொள்ளலாம்.
மேலும், தேர்வுக்கான பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிட்டு, தேவைப்படும் தகவல்களை திரட்டி தேர்வுக்கு தயார் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago