போலி திரைப்பட இயக்குநர் கைது :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த டேவிட் துரைராஜ் மகன் இமானுவேல் ராஜா(43). இவர், அடிக்கடி ராமேசுவரம் வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்து தான் ஒரு சினிமா இயக்குநர் என்றும், விரைவில் படம் எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனது விடுதி அறைக்கு பெண்களை வரவழைத்து நடிக்குமாறு கூறி வீடியோக்களை எடுத்துள்ளார். தனது திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி, பலரிடமும் லட்சக்கணக்கான ரூபாயை வாங்கி ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர் கார்த்திக் ராஜா, காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து இமானுவேல் ராஜாவை ராமேசுவரம் நகர் போலீஸார் கைது செய்தனர். இமானுவேல் ராஜாவிடமிருந்து 12 ஏடிஎம் கார்டுகள், 3 வங்கி காசோலை புத்தகங்கள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இவர் மீது ஏற்கெனவே கோவில்பட்டி காவல்நிலையத்தில் நகை, பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

சினிமா

10 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

30 mins ago

வாழ்வியல்

49 mins ago

சுற்றுலா

52 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்