கோவை: சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கான தமிழக அணியைத் தேர்வு செய்யும் வகையில், அந்தந்த மாவட்ட அளவில் நேற்று வீரர்கள் தேர்வு நடைபெற்றது.
கோவை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், நேரு விளையாட்டரங்கில் தேர்வு நடைபெற்றது. மாவட்ட கால்பந்து கழகத் தலைவர் மதன் செந்தில், செயலாளர் அனில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைபெற்ற இத்தேர்வில், கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு ‘கிளப்’களில் விளையாடிவரும் வீரர்கள் என 150 பேர் கலந்து கொண்டனர். இதில், 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரு வீரர்களும், 21 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் இரு வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அணிக்கான தேர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட கால்பந்து கழக நிர்வாகிகள் கூறும்போது, “சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் தமிழக அணிக்கான தேர்வு சென்னை லயோலா கல்லூரியில் அக்டோபர் 13-ம் தேதி (இன்று) தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த சிறந்த 4 வீரர்களைத் தேர்வு செய்து அனுப்ப தமிழக கால்பந்து சங்கம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கோவையில் இருந்து சரண் சுரேஷ், கார்சியா சைமன், விக்ரம், அஜ்மீர் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
46 secs ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago