கோவை: கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையால், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நிலுவை வாடகை ரூ.2.77 கோடி வசூலாகியுள்ளது.
கோவை மாநகராட்சியின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சி வணிக வளாகங்களில் நீண்ட நாட்களாக வாடகையை செலுத்தாமல் இருந்தவர்களின் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். பல கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, நிலுவை வைத்துள்ளவர்கள் வாடகை தொகையை செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 20 நாட்களில் நிலுவை வாடகை ரூ.2.77 கோடி வசூலாகியுள்ளது. கடைகளைப் பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடரும். இதேபோல, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நடத்தப்பட்டுவரும் நியாய விலைக்கடைகளுக்கான வாடகை ஒரு கோடியே 7 லட்ச ரூபாயை செலுத்தக் கோரி சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையருக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலக நிலுவை வாடகை ரூ.34 லட்சத்தை செலுத்தக் கோரி சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை இயக்குநருக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
52 mins ago
ஜோதிடம்
55 mins ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago