லாரி மோதியதில் கர்ப்பிணி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தில் வசிப்பவர் விஜயகுமார்(25). இவரது மனைவி தமிழரசி(21). மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும், மாங்கால் கூட்டுச்சாலையில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் வீடு திரும்பினர்.

மாங்கால் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி உயிரிழந்தார். இது குறித்து தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்