குளறுபடிகளை களைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆளுநரிடம்அதிமுக வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

குளறுபடிகளை களைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி ஆளுநர் தமிழிசையிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் ஆளுநர் தமிழிசையிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

புதுவை மாநில தேர்தல் ஆணையம் தான்தோன்றித்தனமாக தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 2006 தேர்தல் நடைமுறையை பின்பற்றாமல் வார்டுகளை குறைத்துள்ளது.

சுழற்சி முறையையும் பின்பற்றவில்லை. புதுவை நகராட்சி மீண்டும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது உள்ளாட்சித் தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பானது.

குறைக்கப்பட்ட 33 வார்டுகளில்தாழ்த்தப்பட்டோருக்கு 6 வார்டுகள்ஒதுக்க வேண்டும். ஆனால் 4 வார்டு மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்விஷயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மத்திய அரசின் உத்தரவு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு உண்டா? இல்லையா? என்பதை ஆளுநர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

சட்டத்தில் இல்லாத இப்பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு ஒருசில அரசியல் கட்சிகள் சுயநலத்துக்காக போராட்டம் நடத்துகின்றன.

முதல்வர், மாநில தேர்தல் ஆணையர் மற்றும் சட்ட வல்லுநர்கள் உட்பட உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டி, தவறில்லாத வகையில் உரிய கால அவகாசம் அளித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்