சேலத்தில் 2 சகோதரிகள் மர்ம மரணம் :

By செய்திப்பிரிவு

சேலத்தில் உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்த பெண், சகோதரியுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.

சேலம் வாய்க்கால்பட்டறை அருகே உள்ள சின்ன அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி (53). இவரது கணவர் சந்திரன். இவர்களுக்கு பிரியா (27) என்ற மகள் உள்ளார். இவர் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு லட்சுமியின் கணவர் சந்திரன் இறந்து விட்டார். லட்சுமியின் சகோதரி சரஸ்வதி (50) திருமணமாகாத மாற்றுத்திறனாளி. இவர் லட்சுமியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. லட்சுமியின் சகோதரர் செல்வராஜ் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது, சகோதரிகள் இருவரும் உயிரிழந்து கிடந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வீராணம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், வீட்டில் இருந்த கடிதத்தில், உடல் நிலை சரியில்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக, எழுதப்பட்டிருந்தது. சகோதரிகள் இருவரும் பாலில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம், என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்