திருவண்ணாமலை அருகே மனைவியின் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட் டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தபாளையம் கிராமத்தில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி ஷகிலா(30). இவர் களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தி.மலை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தாயார் சரோஜா வீட்டுக்கு ஷகிலா வந்துள்ளார். இதையறிந்து, அங்கு சென்ற முருகன், மனைவியை வீட்டுக்கு வருமாறு நேற்று முன்தினம் நள்ளிரவு அழைத்துள்ளார்.
அப்போது வழக்கம்போல் முருகன், மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட் டுள்ளது. பின்னர் ஷிகிலா உறங்கச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து, மனைவி ஷகிலாவின் தலையில் போட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தி.மலை கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
சினிமா
32 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
கார்ட்டூன்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago