ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் :

By செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமீறலை அடுத்து ராதாபுரம் ஒன்றியம் கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராதாபுரம் ஒன்றியம் கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி செயலாளராக பாலசுப்பி ரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வாழவந்த கணபதி ஊராட்சியின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துள் ளார். இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக பால சுப்பிரணியன் செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவிடம் ஆதாரங்களுடன் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலை யில் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் யாருக் கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்க சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

27 mins ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்