நாமக்கல்லில் 8.66 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 684 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 700 இடங்களில் நடந்தது. இதன்படி 12-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட சிறப்பு முகாமில் 85 ஆயிரத்து 375 பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 31 ஆயிரத்து 448 பேருக்கும், 26-ம் தேதி நடைபெற்ற 3-ம் கட்ட முகாமில் 59,753 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

இதன்படி மூன்று கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 576 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வழக்கமான முகாம் மூலம் 8 லட்சத்து 66 ஆயிரத்து 864 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 60 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தவிர, 2 லட்சத்து 63 ஆயிரத்து 318 பேர் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

36 mins ago

இந்தியா

17 mins ago

கருத்துப் பேழை

26 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

9 hours ago

மேலும்