முதல்வரின் பொது நிவாரணம் நிதி மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கடலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரோனாநோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த 14 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.42 இலட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, இலவச தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 44 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் மற்றும் அரசு அலுவலர்கள, பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 mins ago
இந்தியா
23 mins ago
விளையாட்டு
12 mins ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
50 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
13 hours ago