சங்கரன்கோவில் அருகே - தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே உள்ள பட்டாடை கட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டப் பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டமாக அடுத்த மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டாடைகட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவ தாக சுவரொட்டி ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதில், ஊராட்சி அலுவல கத்தை பட்டாடைகட்டி கிராமத் தில் கட்டாமல் அடுத்த ஊரில் கட்டியதை கண்டித்தும், இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலைக் கடை, குடிநீர் பிரச்சினை குறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், குளக்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கா ததை கண்டித்தும் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

வாழ்வியல்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்