பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் இந்திய விமானப்படை வீரர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் கமாண்டர்கள் நித்தின் உபாத்யா, சைலேந்திர சிங் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் இருந்து சைக் கிள் பேரணியாக புறப்பட்டனர். இந்த சைக்கிள் பேரணி நேற்று சிதம்பரம் வந்தடைந்தது. அப் போது அவர்களுக்கு சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் போலீஸார் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமானப்படை வீரர்கள் மாமல்லபுரம் புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து டிஎஸ்பி ரமேஷ் ராஜ் கூறுகையில், "1971-ம்ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ் தானுக்கும் இடையே நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டு நிறைவு பெற்றது. இதை கொண்டாடும் வகையில் இந்திய விமானப்படை வீரர்கள் தஞ்சாவூரிலிருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் பேரணியாக சென்று மீண்டும் தஞ்சாவூர் என சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் செல்கின்றனர்" என்று தெரி வித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago