புதிய மாவட்டங்களில் புள்ளியியல் அலுவலகங்களை ஏற்படுத்த கோரிக்கை :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ப.அந்துவான்சேரல் தலைமை வகித்துப் பேசியது: அமைச்சுப் பணியாளர்களுக்கு தனி அமைப்பு ஏற்படுத்த தொழில்நுட்பப் பணியி டங்களை ஒதுக்கக்கூடாது.

புதிய பணியிடங்களாக ஏற்படுத்த வேண்டும். புதிய மாவட்டங்களில் புள்ளியி யல் துறைக்கு தனி அலுவ லகங்கள் ஏற்படுத்த வேண் டும் என்றார்.

பொதுச் செயலாளர் பொ.கண்ணதாசன், வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எ.பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், பிரச்சாரச் செயலாளர் பால்பாண்டி, மாநில இணைச் செயலாளர் தா.முகிலன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், புள்ளி இயல் உதவி ஆய்வாளர்களுக்கு வட்டாரப் பணிக்காலத்தை களப்பணியாகக் கருதி அரசாணை வழங்கி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக திருச்சி மாவட்டத் தலைவர் மு.பால சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

க்ரைம்

29 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

உலகம்

39 mins ago

விளையாட்டு

59 mins ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்