மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான - துப்பாக்கி சுடும் போட்டியில் தஞ்சை டிஐஜி முதலிடம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே நாரணமங் கலத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் மத்திய மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் 2 ஐஜி, 2 டிஐஜி, 13 எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

பிஸ்டல் துப்பாக்கி சுடுதல், இன்சாஸ் துப்பாக்கி சுடுதல் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் முதலிடத்தையும், தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார் 2-ம் இடத்தையும், நாகை எஸ்பி ஜவஹர் 3-ம் இடத்தையும் பிடித்தனர். அதேபோல, இன்சாஸ் துப்பாக்கி சுடும்போட்டியில் நாகை எஸ்பி ஜவஹர் முதலிடத்தையும், தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார் 2-ம் இடத்தையும், திருவாரூர் எஸ்பி விஜயகுமார், புதுக்கோட்டை எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் 3-ம் இடத்தையும் பிடித்தனர். ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப் படையில் தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார் முதலிடத்தையும், நாகப்பட்டினம் எஸ்பி ஜவஹர் 2-ம் இடத்தையும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் 3-ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஏடிஜிபி (கமாண்டோ) அமல்ராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

32 mins ago

ஆன்மிகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்