பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதியளிக்க கோரி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் கள் இறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. பீகாரில் அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ள நிலையிலும், கள்ளுக்கு விலக்கு அளித்துள்ளது. தமிழகத்திலும் கள் இறக்க அனுமதி அளித்தால் பனை, தென்னை விவசாயிகள், மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கை தரம் உயரும். முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வாக்குறுதி அளித்தும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, தமிழக விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
8 hours ago