மின்சாரம் பாய்ந்து பெண், விவசாயி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மறமடக்கி பத்திரான் குடியிருப்பைச் சேர்ந்தவர் மதியழகன். விவசாயியான இவரது மனைவி தமிழ்செல்வி(50).

இவர், அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக நேற்று மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து அந்த இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விவசாயி உயிரிழப்பு

ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்துவிடுதி யைச் சேர்ந்தவர் என்.மதிராஜன்(39). விவசாயி யான இவர், நேற்று தனது வாழைத்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது, வாழை யிலை மின் கம்பியில் உரசியதால் அதன் வழியே மதிராஜன் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மதிராஜன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்