சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு :

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் தேசிய பசுமைப் படை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளை நடத்தியது.

இதில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா தென்காசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அன்புமணி தலைமை வகித்தார். நல்லாசிரியர் மாடசாமி, வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி பரிசளித்தார். திருநெல்வேலி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல் எரிபொருள் சிக்கனம் குறித்து உரையாற்றி, அதிலிருந்து விநாடி வினா நடத்தி பரிசு வழங்கினார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய கருத்தாளர் ரெங்கநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் குமார், தங்கபாண்டியன், திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் சந்திர புஷ்பம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஸப் நன்றி கூறினார்.

திருநெல்வேலி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல் எரிபொருள் சிக்கனம் குறித்து உரையாற்றி, அதிலிருந்து விநாடி வினா நடத்தி பரிசு வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

சுற்றுலா

31 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்