தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் தேசிய பசுமைப் படை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளை நடத்தியது.
இதில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா தென்காசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அன்புமணி தலைமை வகித்தார். நல்லாசிரியர் மாடசாமி, வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி பரிசளித்தார். திருநெல்வேலி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல் எரிபொருள் சிக்கனம் குறித்து உரையாற்றி, அதிலிருந்து விநாடி வினா நடத்தி பரிசு வழங்கினார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய கருத்தாளர் ரெங்கநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் குமார், தங்கபாண்டியன், திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் சந்திர புஷ்பம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஸப் நன்றி கூறினார்.
திருநெல்வேலி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல் எரிபொருள் சிக்கனம் குறித்து உரையாற்றி, அதிலிருந்து விநாடி வினா நடத்தி பரிசு வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
சுற்றுலா
31 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
3 hours ago