சரவணம்பட்டி போலீஸார், துடியலூர் சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, 3 இளைஞர்கள் போலீஸாரை பார்த்ததும் தப்ப முயன்றனர். போலீஸார் விரட்டிச்சென்று 2 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் போயர் வீதியைச் சேர்ந்த அர்ஜூன்(23), உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக்(25) ஆகியோர் எனத் தெரியவந்தது. தப்பியோடியவர் செல்வபுரத்தைச் சேர்ந்த பூவேந்திரன் என்பதும், இவர்கள் மூவரும் சேர்ந்து, கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அர்ஜூன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பூவேந்திரனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
9 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago