வேலூர்: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்த மீரா பாய் சானுவுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், வேலூர் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு கவுன்டர் தொடங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்ற மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். ஒரே ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 46-வது இடத்தில் உள்ளது. நாட்டுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ள மீரா பாய் சானுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில் பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர்.
அதன்படி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு வாழ்த்து கவுன்டர் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மூன்று நாட்கள் செயல்படும் சிறப்பு கவுன்டரில் ரூ.10 கட்டணம் செலுத்தி மீரா பாய் சானுக்கு பொதுமக்கள் வாழ்த்து செய்தியை அனுப்ப முடியும். என அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
34 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago