2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது :

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு அருகே கொன்னையாறு கிராமத்திலிருந்து வெண்ணந்தூருக்கு கோழித்தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எலச்சிபாளையம் காவல் துறையினர் கொன்னையார் முனியப்பன் கோயில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அரிசி மூட்டையுடன் வந்த சரக்கு ஆட்டோவை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் கோழித் தீவனத்துக்காக ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த கொல்லிமலையைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் மனோஜ் (23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 2 டன் ரேஷன் அரிசி, ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்