கடந்த மாதம் 27-ம் தேதி கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதி பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள புதுப்பதி பகுதியில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, 45 குடும்பங்கள் புதுப்பதி நத்தம் என வகைப்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதில் 30 குடும்பங்களுக்கு முன்னரே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 குடும்பங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதாகவும், பட்டா வழங்க வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, இப்பகுதியில் வருவாய் வகைப்பாடு தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் உடனடி அறிக்கை சமர்ப்பிக்கவும், பட்டா வழங்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இம்மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கடந்த 12-ம் தேதி மாவுத்தம்பதி கிராமம், புதுப்பதி மலைவாழ் செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மேலும், பட்டா பெற்றுள்ள மழைவாழ் மக்களுக்கு ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
6 hours ago