காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் இயந்திரம் : திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலை யங்களில் சானிடரி நாப்கின் இயந்திரங்களை காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா தொடங்கி வைத்தார்.

பெண் காவலர்களின் நலன் கருதியும், பணியி ன்போது ஏற்படும் இடர்பாடுகளை நிவர்த்தி செய்யும் விதமாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் 41 காவல் நிலையங்களை உள்ளடக்கிய 27 இடங்களில் தானியங்கி சானிடரி நாப்கின் இயந்திரங்கள் அமைக் கப்பட்டுள்ளன.

இவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. ஏ.டி.எஸ்.பி.லாவண்யா முன்னிலை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா சானிடரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், கணவன், மனைவி இருவரும் பணியில் இருப்பதால் அவர்களது குழந்தைகள் நலன் கருதி குழந்தைகள் காப்பகத்தை ரவளிபிரியா திறந்து வைத்தார்.

காப்பகத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையில், ஐந்து சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட்டு மொபைல் போன் மூலம் பார்க்கும் வகையில் பெற்றோருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்