கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள வளையபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி என்ற கண்ணன்(45). பந்தல் கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 16 வயதில் ஒரு மகன், 14 வயதில் ஒரு மகள் உள்ளனர். பழனிசாமி கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் மாயமானார். சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீஸில் புகார் அளித்தனர். பேரூர் அனைத்து மகளிர் போலீஸாரும் விசாரித்தனர்.
சோமனூர் அருகே சிறுமியுடன் பதுங்கியிருந்த பழனிசாமியை அனைத்து மகளிர் போலீஸார் நேற்று பிடித்தனர். சிறுமியை கடத்திச் சென்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததும், பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் பழனிசாமி மீது வழக்கு பதிந்து நேற்று அவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
6 mins ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
க்ரைம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
கார்ட்டூன்
2 hours ago
இந்தியா
1 hour ago
வர்த்தக உலகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
உலகம்
9 hours ago