ரூ.50 லட்சம் நில அபகரிப்பு வழக்கில் 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

வேலூரைச் சேர்ந்தவர் சுகுணா (80). இவருக்கு திருநின்றவூர் பிரகாஷ் நகரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த 2017-ல் சுகுணாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து, ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் சிலர் நில அபகரிப்பில் ஈடுபட்டனர்.

இதையறிந்த சுகுணா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ஆள்மாறாட்டம் செய்து, நிலத்தை அபகரித்ததாக திருநின்றவூர் ராம் நகரைச் சேர்ந்த மோகன்(56), நடுகுத்தகை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் (55), அப்பாஸ் அலி(58), நல்லூர் குமணன் (44) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், சிலரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்