நெய்தலூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள நெய்தலூர் ஊராட்சியில், கரோனா ஊரடங்கு காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுவதாகவும், இதனால், ஏற்கெனவே பணி செய்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்க பல மாதங்களாகி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தங்களுக்கு வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெய்தலூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்