ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிக்காக - குளக்கரையில் உள்ள கோயிலை இடிக்க எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

கோவை முத்தண்ணன் குளக்கரையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக, அங்குள்ள கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. குளக்கரையில் வசித்த மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசைமாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு புதியகுடியிருப்புகளுக்கு சென்று விட்டனர். அவர்களது வீடுகள் முதற்கட்டமாக இடிக்கப்பட்டன. தற்போது அங்கு காலியாக உள்ள 400-க்கும்மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை இடிக்க நேற்று அதிகாரிகள் வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், முத்தண்ணன்குளம் சுண்டப்பாளையம் சாலை சிவராம் நகரில் கோயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கோயிலை இடிக்கும் முடிவை கைவிட்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

இந்தியா

39 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்