தமிழக நிதி அமைச்சர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு - ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு :

By செய்திப்பிரிவு

தமிழக நிதிஅமைச்சர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்தனர்.

உள்நோக்கத்துடன் என் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் என் மீது பதிவு செய்த வழக்கை திரும்ப பெற வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தமிழக நிதி அமைச்சரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை பதிவிட்டுள்ளார். இதனால் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து, வழக்கு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்