பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துதிருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ்சார்பில் தச்சநல்லூரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை சைக்கிள் பேரணி நடத்தஏற்பாடு செய்யப்பட்டது. வாகன பேரணிக்குபோலீஸார் அனுமதி அளிக்காததால், மாநகர்மாவட்டகாங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன்தலைமையில் தச்சநல்லூரில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர், காந்திசிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துகாங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பழனி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.
நாகர்கோவில்
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ளஇந்திரா காந்தி சிலை முன்பிருந்து நேற்று காங்கிரஸார் சைக்கிள் பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று இந்திராகாந்திசிலை முன்பு காங்கிரஸார் திரண்டனர். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சைக்கிள் பேரணியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். மேற்கு மாவட்ட தலைவர் தாரகை கத்பட், மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். தடையை மீறிசைக்கிள் பயணம் மேற்கொண்டதாக விஜய்வசந்த் எம்.பி. உட்பட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
வைகுண்டத்தில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்சைக்கிள் பேரணி நடத்தினர். சுமார் 200 பேர் சைக்கிள்களில் முக்கிய வீதிகள், கடை வீதிகள் வழியாக சென்று சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்புநிறைவுசெய்தனர். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் மோட்டார் சைக்கிளுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருப்பதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago