ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்ட அமைச்சர் இடம் தேர்வு :

By செய்திப்பிரிவு

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

ராசிபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது தாசா தெருவில் செயல்பட்டு வருகிறது. இங்கு புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்குதல், பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டுமென ராசிபுரம் நகர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன்பலனாக மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று ராசிபுரம் அண்ணா காலனி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள அரசு நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார், பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செல்வி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. ஆர். என். ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

விளையாட்டு

37 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்