போக்சோ வழக்கில் இளைஞர் கைது :

By செய்திப்பிரிவு

கோவை: கோவையை சேர்ந்த தம்பதியின் 17 வயதில் மகள், கடந்த 23-ம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த பூவரசன்(18) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இவர் கோவையில் சோப்பு கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதையடுத்து, போலீஸார் வேதாரண்யம் சென்று சிறுமியை மீட்டனர். விசாரணையில், சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. பூவரசன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

20 mins ago

தமிழகம்

10 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

23 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

25 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்