கோவை சாயிபாபாகாலனி காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல்துறையினர், கோவில்மேடு தவசி நகரிலுள்ள பொங்காளியம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போலீஸாரைக் கண்டதும் தப்ப முயன்ற 4 இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் வலிநிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் அதிகளவில் இருந்தன.
அவர்கள், கவுண்டம்பாளை யத்தைச் சேர்ந்த ஜானகிராமன் (24), டி.வி.எஸ் நகரைச் சேர்ந்தபார்த்திபன்(35), இடையர் பாளையத்தைச் சேர்ந்த கபிலேஷ்(27), குனியமுத்தூ ரைச் சேர்ந்த முகமது அப்சல்(21) என்பதும், இந்த மாத்திரைகளை முறைகேடாக பெற்று தண்ணீரில் கரைத்து, போதைப் பயன்பாட்டுக்காக ஊசி மூலம் உடலில் ஏற்ற கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீஸார், 650 மாத்திரைகள், ரூ.11,100 தொகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
தமிழகம்
28 mins ago
கல்வி
31 mins ago
விளையாட்டு
41 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago