திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகே பாப்பாகுடியைச் சேர்ந்த கார்த்திகைச்சாமி மகன் ராமராஜன் (25), திருமணமாகாத இவர் சென்னையில் தங்கி பெயின்டராக வேலை பார்த்து வந்தார். தனது சகோதரியின் கணவர் இறந்ததை அடுத்து சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ராமராஜன் வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று அதிகாலை பாப்பாகுடி பிள்ளையார் கோயில் ஊருணி அருகே ராமராஜன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து பூவந்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் பாப்பா குடியைச் சேர்ந்த முருகானந்தம் மகன் சந்தோஷ் (19), அவரது நண்பர் கார்மேகம் மகன் கணேஷ்குமார் (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:
சந்தோஷின் தாயாருக்கும் ராமராஜனுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதை சந்தோஷ் கண்டித்துள்ளார். ஆனால் ராம ராஜன் கேட்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது நண்பர் கணேஷ்குமாருடன் சேர்ந்து ராமராஜனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago