வணிகர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் : சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: வணிகர்களுக்காக தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப் படுத்த, மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

அத்தியாவசியப் பொருட் களான மளிகை, பலசரக்கு, காய்கறி, பால், உணவகம், விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட வணிகர்கள் தடையின்றி வணிக சேவை செய்துவருகின்றனர்.

பொதுமக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் வணிகர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள வணிகர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை வணிகர் சங்கம் தொடர்ந்து வணிகர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், வணிகர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டால் அனைத்து வணிகர்களும் முழுமையாகவும், பாதுகாப்பாகவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலும். எனவே, மாவட்ட நிர்வாகம் வணிகர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்