திருச்சி கலையரங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப் பூசி போடும் முகாமை ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்திலேயே தடுப்பூசி போடுவதில் 6-வது இடத்தில் திருச்சி மாவட்டம் உள்ளது. இதுவரை மொத் தம் 4.05 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 2,800 பேரில் ஏற்கெனவே 2,300-க்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
மொத்த வியாபாரத்துக்காக காந்தி மார்க்கெட் ஜூன் 21-ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படாது.
அடுத்த வாரம் முதல் திருச்சி மாநகரில் 4 கோட்டங்களிலும் தினமும் ஒரு வார்டு என்ற அடிப்படையில் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் மக்களுக்கு அலைச்சல் தவிர்க்கப் படும் என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
தமிழகம்
14 mins ago
இந்தியா
7 mins ago
விளையாட்டு
23 mins ago
வாழ்வியல்
32 mins ago
ஓடிடி களம்
42 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago