புதுச்சேரியில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை 3.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக் கையும் 5000-க்கு கீழ் குறைந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் 7,657 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில்309 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 4, காரைக்காலில் 3 என 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் ஆண், 6 பேர் பெண்கள் ஆவர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,691 ஆகவும், இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவும் உள்ளது.
தற்போது ஜிப்மரில் 248, இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 218, கோவிட் கேர் சென்டரில் 182 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 4,145 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 4,947 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 686 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 94.12 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,24,328 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுபற்றி சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் கூறுகையில், “புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.
சில தினங்களாக புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 500-க்கும் கீழேதான் உள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் சேர்த்து 4,947 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மருத்துவமனையில் நோய்தொற்றுடன் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.
புதுச்சேரியில் தொடர்ந்து டெஸ்ட் பாசிட்விட்டி 5 சதவீதத்திற்கும் கீழே குறைந் துள்ளது” என்றார்.
மொத்தம் 4,947 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 686 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago