ஏற்கெனவே அச்சிடப்பட்ட படிவத்தில் காலியாக விடுபட்ட பகுதிகளை பூர்த்தி செய்து உத்தரவு பிறப்பித்த திருவண்ணா மலை குற்றவியல் நடுவருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரி வித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிர மணியம் என்பவர், அதிக வட்டிக்கு பணத்தை கடனாகக் கொடுத்து, தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாக ஆர்த்தி என்பவர் மாவட்ட எஸ்பி மற்றும் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால், ஆர்த்தி திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை குற்றவியல் நடுவர், இந்த நிலஅபகரிப்பு தொடர்பான விசாரணையில் குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந் தார்.
அதேபோல வழக்கை முடிப்பதாக இருந்தால் அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை நடத்திய காவல் துறையினர் புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து, அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கறிஞருக்கு எதிரான தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது, ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி, திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் ஏற்கெனவே அச்சிடப்பட்ட படிவத்தில் காலியாக விடப்பட்ட பகுதிகளை மட்டும் கையால் பூர்த்தி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு கண்டனம் தெரி வித்தார்.
வரும் 22-ம் தேதிக்குள் அறிக்கை
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago