சோப்பு ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் கொள்ளை :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே சோப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம், 41 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே மாலை ப்பட்டி காமாட்சி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். திண் டுக்கல்லில் உள்ள தொழிற் பேட்டையில் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு கம்பெனிக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.23 லட்சம் ரொக்கம், 41 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது.

திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் சோதனையும் நடத் தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

36 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

க்ரைம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்